சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் – 2 பெண்கள் துணிகரம்.!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 வது பிளாட்பார் பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒய்யாரமாக வந்து நின்றது சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குரு சாமி காவலர் வெங்கடேசன் ஆகியோர் பயணிகளை சோதனை போட்டுக் கொண்டு இருந்தனர். சரோஜினி ரவுட் வயது 39. கோக்கலாபா விடிசி கதகுண்டா கோகலாபா போஸ்ட் ஒடிசா மாநிலம் 2. நளினி சாமல் வயது 44. பி த்யாதர் மேற்பரையாளர் சாமல் கதகுண்டா கோகலாபா நரசிங்கபூர் ஒடிசா மாநிலம் இவர்கள் இருவரும் வைத்திருந்த பையில் 20 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரிடம் அவர்கள் நாங்கள் பெண்கள் தானே எங்களை விட்டு விடுங்கள் என ஒய்யாரமாக மயக்கும் விழிகளில் கெஞ்சினர் .எதற்கும் மயங்காத போலீஸ் துணை சூப்பிரெண்ட் கர்ணன் எதற்கும் மயங்காமல் இது தமிழ்நாடு போலீஸ் உங்க பாச்சா எங்க கிட்ட பலிக்காது .ஜெயிலுக்கு போங்க எனக்கடிந்தார். போலீசாரும் குற்றவாளிகளை சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிந்து கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்