கோவையில் கஞ்சா கடத்தல் – 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமணி செல்வம் நேற்று குனியமுத்தூர் பொன்னுசாமி வீதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 575 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,கஞ்சா விற்ற பணம் ரூ.12,685 பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிபட்டி சேர்ந்த ஆனந்த் மனைவி கவிதா ( வயது 32) கிருஷ்ணகிரி நயானப்பட்டி சீனிவாசன் மனைவி மீனா ( வயது 35) கோகுல்நாத் (வயது 22) கர்நாடகா மாநிலம்,பொகலூர் நாகராஜ் (வயது 31) மேச்சேரி செல்வம் ( வயது 67)என்பது தெரியவந்தது.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..