கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த போத்தனூர் கலைஞர் நகரை சேர்ந்த முருகேஷ் ( வயது 51) அவரது மகன் முத்து (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். துடியலூர் முத்து நகரை சேர்ந்த லோகநாதன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பைக்கில் கஞ்சா கடத்தல் – தந்தை,மகன் கைது.!!
