கேஸ் சிலிண்டர் வெடித்து மனைவி, மகன் பலியான சோகத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை..

கோவை பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) கடந்த 31 -12- 2023 அன்று அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து அவரது மனைவியும் மகனும் பலியானார்கள். அதில் இருந்து செந்தில்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.