ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்… சீறி பாய்ந்து காப்பாற்றிய ஆர்.பி.எப் போலீஸ்காரர் – திக்..திக்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!!

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் .ஆர்,பி.எப் போலீஸ்காரர் காப்பாற்றினார்…

கோவை ரயில் நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று மாலை3 – 15 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்தனர். அப்போது பெண்கள் பெட்டியில் ஏறுவதற்காக 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கையில் பைபயுடன் ஓடி வந்தார்.ஏறும்போது தவறி நடைமேடைககும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் ஓடிச்சென்று ரயில் தண்டவாளத்துக்குள் விழாமல் அந்தப் பெண்ணை இழுத்துப் பிடித்து காப்பாற்றினார். அவர் காப்பாற்றா விட்டால் அந்தப் பெண் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ரயில் நிலையத்தில் நின்றவர்கள் இதனை பார்த்து பெருமூச்சு அடைந்தனர் . ரயில்வே பாதுகாப்பு படைபோலீஸ்காரர் ராஜேஷ் கண்ணனுக்கு அந்த பெண் நன்றி கூறினார் . பின்னர் அதே ரயிலில் பெண்கள் பெட்டியில் அந்த பெண்ணை ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மீட்பு பணியின் போது கீழே விழுந்த போலீஸ்காரருக்கும் இலேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி வைரலாக ஆகி பரவி வருகிறது.