டாக்டர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை..!

கோவை ரேஸ்கோர்ஸ், புலிகுளம் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் துரைராஜ் (வயது 88 )இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த வைர மோதிரம் 3 பவுன் தங்க மோதிரம், ருத்ராட்ச மாலை ஆகியவை திடீரென காணாமல் போனது. அவைகளை யாரோ திருடிச் சென்று விட்டனர் .இது குறித்து டாக்டர். துரை ராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..