கோவை போலீஸ் பயிற்சி ரைபிள் கிளப்பில் தங்க செயின் திருட்டு – மர்ம நபர் கைவரிசை.!!

கோவை பீளமேடு மணியம் பாப்பு சாமி விதியைச் சேர்ந்தவர் மகேஷ் ராஜா .இவரது மனைவி அன்னபூரணி ( வயது 44)இவர்களது மகன் கோவை போலீஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதி பயிற்சிக்காக ரைபிள் கிளப் சென்றிருந்தார். அங்கு அவரது பையை வைத்துவிட்டு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பையில் இருந்த மூன்றரை பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து அவரது தாயார் அன்னபூரணி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பாதுகாப்பு நிறைந்த ரைபிள் கிளப்பில் நடந்த இந்த திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.