ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் தங்க நகை அபேஸ்..!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு . இவரது மகள் யஸ்வினி ( வயது 24) இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்க கோவைக்கு வந்தார். சான்றிதழ் வாங்கிவிட்டு பஸ்சில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது கழுத்தில் இருந்த 8 கிராம் தங்கச் செயினை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து யஸ்வினி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..