கோவை தொழில் அதிபர் வீட்டில் தங்கம், பணம் திருட்டு..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், சேரன் நகரில் வசிப்பவர் சச்சின் குமார் (வயது 52) இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனேசென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 398 கிராம் தங்க கட்டி, தங்க காசுகள்,பணம் ரூ லட்சம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சச்சின் குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.