நகை பட்டறை அதிபரிடம் தங்கம் மோசடி – வடமாநில தொழிலாளிக்கு வலைவீச்சு.!!

கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்கு பதிவு சோம்பூர் டோலியை.தேடி வருகிறார்.