மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு..!

த்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர்கள் என கூறப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமானது தற்போது ரூ.18,000ஆக உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபடி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளதால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000ஆக உயர்ந்துள்ளது.