கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்..
கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமனம்.!!
