கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமனம்.!!

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்..