அரசு பஸ் கண்டக்டர் எங்கோ மாயம்..!

கோவை போத்தனூர்,வெள்ளலூர் ரோட்டில் உள்ள சித்தன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39 ) இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1- ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இவர் பணப் பிரச்சினையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இவரது மனைவி சுகன்யா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.