அரசு பஸ் டிரைவர் திடீர் மாயம் – போலீசில் புகார்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் உள்ள சக்தி கார்டனை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48)அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3,ஆம் தேதி சுதாகர் வீட்டில் இருந்து திடீரென்று எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி அம்பிகாவதி பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.