தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு.!!

சத்தியமங்கலம்: தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  காவல்துறை சார்பில் தமிழ்நாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி சத்யா தியேட்டர், மணிக்கூண்டு, ஆற்றுப்பாலம், அத்தாணி சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இதை தொடர்ந்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்..