கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பட்டதாரி பெண், வாலிபர் கைது…!

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு சந்தேகபடும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா, 55 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) சிட்கோ சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர்களில் சிஜு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை பார்த்து வருகிறார். ஷர்மிளா பி. காம் . சி. ஏ .படித்து முடித்துவிட்டு ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்களிடமிருந்து கஞ்சா ,போதை மாத்திரைகள் ,எடை இயந்திரம் , 3 செல்போன் , ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..