குட்காவிற்கு வேறு பெயர் வைத்து விற்பனை – பெண் கைது..!

காஞ்சிபுரம் திருக் காளிமேடு பகுதியில் முத்து துசாமியின் மனைவி ஈஸ்வரி வயது 50 .இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் குட்கா விற்பனையும் செய்து வருகிறார். கடைக்கு வரும் நபர் கள் ஈஸ்வரியிடம் குட்கா என கேட்காமல் காட்கு என சந்தேக வார்த்தையில் கேட்பார்கள். மப்டியில் வந்திருந்த போலீஸ்காரர் அது என்னடா காட்கு புதுசா இருக்கிறது என சந்தேகப்பட்டு கடையை அலசி ஆராய்ந்தார். அப்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் குட்கா இருந்ததை கண்டுபிடித்து ஈஸ்வரியை கைது செய்தார் . காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..