ஜிம் பயிற்சியாளர் கிணற்றில் குதித்து தற்கொலை..

கோவை : காரமடை பக்கம் உள்ள கல்லார் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புவனேஷ் குமார் (வயது 28 ) ஜிம் பயிற்சியாளர். காரமடையில் ஜிம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர் 3 தடவை தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் . இந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் குதித்து இவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தந்தை முருகேசன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..