வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக புதிய பெண் நடத்துனர் இருவருக்கு மகளிர் தின வாழ்த்து.!!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடத்துனராக பணிபுரிய ஆனந்தி 31, ஜெகதீஸ்வரி 48 ஆகிய இருவரும் நடத்துனருக்கான உரிமம் மற்றும் பயிற்சி பெற்று பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்தனர் இந்நிலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆணைக்கிணங்க கோவமாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி ஆலோசனையின் பேரில் விரைவில் பணிபுரிய உள்ளனர் இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் நேரடியாக சென்று இருவரையும் சந்தித்து நகரக்கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து தனது மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து உடனிருந்த நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் பெண்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து நகர்மன்றத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக்கழக கிளை எல்.பி.எஃப் தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி, சங்கத்தலைவர் மோகன் ராஜ், மாவட்ட பிரதிநிதி டென்சிங், தகவல் தொழில்நுட்ப அணி ஜெயராம் என்ற கிருஷ்ணமூர்த்தி, முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்..