டில்லியில் கடும் பனி : விமான, ரயில் சேவைகள் பாதிப்பு…

புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்களில் மக்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை சரியாக தெரியாததால், விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதேபோல் வந்து சேர வேண்டிய விமானங்களும் தாமதமாக வந்து சேர்ந்தன. 30 ரயில்கள் தாமதம் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால், 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது