உயர்ரக போதைப் பொருள் கடத்தல் – 2 பேர் கைது.!!

கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அங்குள்ள சேரன் நகர், அண்ணா காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 5 கிராம் எடை கொண்ட உயர் ரக போதை பொருள் (மெத்தம் பெட்டமின்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் இருக்கும். இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் அவர்கள் போத்தனூர் ஜாம் நகரை சேர்ந்த சுகாலி (வயது 27) சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த அஜித் (வயது 25) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..