நள்ளிரவில் வீட்டுக்கு தீ வைப்பு – 2 தரகர்கள் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 29 )தெற்கு பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் ( வயது 25) இவர்கள் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இவர்கள் 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தொழில் போட்டி காரணமாக பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் பிரதீப்பின் வீட்டிற்கு நள்ளிரவில் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை நேற்று முன்தினம்கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஆனந்தை வீரபாண்டி அருகே வைத்து நேற்று கைது செய்தனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.