கோவை மத்திய சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை வரைந்த கைதி கைது.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30) இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்டார் அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை கைபற்றினார்..அதில் ஐ.எஸ் ஐ.எஸ்.அமைப்பின் கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரியவந்தது.
நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பரில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடிகளை வரைந்துஇருந்தார்.
இது இஸ்லாமிய அரசின் கொடி என்றும், கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் ஆசிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜெயிலர் சிவராஜன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன் எனவும் , அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்காக ஜிஹாத் வேலையைத் தொடர்வேன் எனவும் , அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து ஜெயிலர் சிவராஜன்ரேஸ் கோர்ஸ் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஐ.எஸ் ஐ.எஸ் ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீது மீண்டும் உபாசட்டம் , கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.ஆசிப்பிடம் இருந்த கைபற்றபட்ட கொடியினையும் ஜெயிலர் , ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.