கோவை கே. கே. புதூர், சின்னப்பன் வீதியைச் சேர்ந்தவர்தாமஸ்.இவரது மகள் ஜெபா (வயது 39).இவரது கணவர் செல்வகுமார் ( வயது 40) கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்து நெல்லை மாவட்டம் களக்காடு பக்கம் உள்ள சிதம்பரபுரம்,புது குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.நேற்று தனது மனைவியை பார்க்க கோவை வந்தார்.அவரை குடும்பம் நடத்த வர அழைத்தார்.அவர் மறுத்ததால் அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் முன் வைத்து ஜெபாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் செல்வகுமாரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
நடுரோட்டில் மனைவியை தாக்கிய கணவர் கைது..!
