மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை..

கோவை காருண்யா நகர் பக்கம் உள்ள மத்வராயபுரம், குறிஞ்சிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்து விட்டார் .இதனால் மனம் உடைந்த முருகேசன் விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி பங்கஜம் காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.