செல்போன் பேசுவதை கணவன் கண்டித்ததால்… 2 குழந்தைகளுடன் மனைவி திடீர் மாயம்.!!

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் முருகன்.கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா ( வயது 38 ) இவர் யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா தனது மகன்கள் சதீஷ் ( வயது 15) சித்தார்த் (வயது 12) ஆகியோருடன் நேற்று திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து முருகன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..