கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மயங்கி விழுந்து முதியவர் சாவு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு முதியவர் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார்.மனுவுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.விசாரணையில் அவரது பெயர் பாலசுப்பிரமணியம் ( வயது 83) பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.