கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பிருந்தாவன் குகன் கார்டனைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி ராதா வெங்கட்ராமன் ( வயது 81 ) இவரை கவனிப்பதற்காக தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் இ..பி. காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி அனுஷா ( வயது 32) என்பவர் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கி மூலம் தனக்குரிய சம்பள பணத்தை எடுத்து வந்தார் .இந்த நிலையில் ரத்னா வெங்கட்ராமன் வங்கி கணக்கிலிருந்த ரூ. 4 லட்சத்து 60 ஆயிரத்தை அனுஷா எடுத்து மோசடி செய்து விட்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அனுஷாவை கைது செய்தனர்..
மூதாட்டி வங்கி கணக்கில் ரூ.4.20 லட்சம் மோசடி – பணிப்பெண் கைது..!
