வால்பாறையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை.!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மின்சார வாரியம் தெற்குப் பகுதியில் நிரந்தர மின் ஊழியராக (லைன்மேனாக) பணியாற்றி வருபவர் கருப்பசாமி வயது 42. இவர் இன்று வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டிரான்ஸ் ஃபார்மரில் நேற்று மாலை மின் இணைப்பு வழங்க ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி தூக்கி எரியப்பட்டுள்ளார். உடனை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர் பரிசோதனை செய்த போது உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரின் மனைவி வாகமலை எஸ்டேட்டில் நிரந்தர பணியாளராக பணி செய்து வருகிறார். இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..