திருச்சியில் போயர் சமுதாய நிர்வாகிகள் பதவியேற்பு விழா – அமைச்சர் நேரு பங்கேற்பு..!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போயர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திருச்சி மாவட்ட தலைவரும் மாநில ஒப்பந்ததாரருமான தொழிலதிபர் ஆர் எஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார் . மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கிளைச் செயலாளர் அண்ணாமலையார் வரவேற்று பேசினார். கோரிக்கைகள் குறித்து போயர் சமுதாய போராளி தேக்கமலை விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ் சின்னசாமி கணேசன் மாவட்ட செயலாளர் சங்கர் மாவட்ட பொருளாளர் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் முருகன் மாவட்ட துணை பொருளாளர் ராமசாமி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். போயர் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் .குறிப்பாக நலவாரியம் அமைத்திடவும் ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்களைப் போன்ற சமுதாய மக்களுக்கு நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பேசினார். விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் போயர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்..