கோவையில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா..!

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்துக்கான புதிய கட்டிடம் சம்பத் வீதி பக்கம் உள்ள ஜி. வி. ராமசாமி ரோட்டில் ரூ 2.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது .இதன் திறப்பு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் துணை போலீஸ் கமிஷனர்கள் ரோகித் நாதன், உதவி போலீஸ் கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமை ப்பு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் கணேசன்,கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளன மாவட்ட தலைவர் கே. ஆர்.ராஜா, தொழிலதிபர் ஜெ. அருள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர், பிரின்ஸ் சுந்தர் , ஜான்சன்,வழக்கறிஞர்கள் விமல் ராகவன் , சாமுவேல் விஜய், முத்துமாலை, சிவக்குமார், சுரேஷ் ராஜா கலையரசன், முனிஸ்வரன்,ரத்தினபுரி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -இந்த புதிய காவல் நிலைய கட்டிடம் 15 சென்ட் நிலத்தில் 12,500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இது 3 தளங்கள் கொண்டதாகும். இதன் மாடியில் கூட்ட அரங்கமும் உள்ளது. 3 தளத்துக்கும் லிப்ட் வசதி கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்..