இந்திய ராணுவ படை ஊழியர் புடவை இறுக்கி கொலை – மனைவி கைது..!

ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவடி செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படையில் நாய க்காக பணிபுரியும் வேளாங்கண்ணி தாஸ் வயது 38. தகப்பனார் பெயர் ஆரோக்கியம் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இரவு வேளாங்கண்ணி தாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு படுக்கை அறையில் சுயநினைவின்றி இருப்பதாக கூறி அவரின் மனைவி லீமா ரோஸ்மேரி ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டாக்டர்களிடம் காண்பித்தார் வேளாங்கண்ணி தாசை பரிசோதி த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக மரணம் என்ற கோணத்தில் வேளாங்கண்ணி தாஸ் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் லீமா ரோஸ் மேரியிடம் பலமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் தனது கணவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது பெற்றோரை கேவலமாக பேசியதால் ஆத்திரத்தில் புடவையால் கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து லீமாரோஸ்மேரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..