இன்ஸ்டாகிராம் காதல்… சூலூரில் 10ம் வகுப்பு மாணவி கடத்தல் – போக்சோவில் காதலன் கைது.!!

கோவை சூலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஒரு மாணவி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிரவீன் ( வயது 20 ) என்பருடன் “இன்ஸ்டாகிராம் ” என்ற சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டது. பிறகு ஆசை வார்த்தை காட்டி அந்த மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..