சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – திருச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

குடிபோதை மறுவாழ்வு மையம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சர்வதேச போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது மத்திய பேருந்து நிலையம் வழியாக திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் முடிந்தது நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துரை தலைவர் ரமேஷ் பாபு காஜாமலை மகளிர் மன்ற துணை நிர்வாக இயக்குனர் சுமையா நாஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.