கூடுதல் வட்டி கேட்டு தொழில் அதிபருக்கு மிரட்டல்- பைனான்ஸ் அதிபர் மீது வழக்குபதிவு..!

கோவை ரத்தினபுரி பெரியசாமி லே அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சரவணன் (வயது 43) என்பவரிடம் 8 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார் .இதற்கு மாதம் ரூ 10 ஆயிரம்  வட்டி செலுத்தி வந்தார். இந்த நிலையில் பைனான்ஸ் அதிபர் சரவணன் கூடுதல் வட்டி கேட்டு தொழிலதிபர் சரவணனை மிரட்டினாராம். கூடுதல் வட்டி கொடுக்க விட்டால் அடமானம் வைத்த பத்திரத்தை திருப்பி கொடுக்க மாட்டேன் என்றும் கூறினாராம். இது குறித்து தொழிலதிபர் சரவணன், ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி பைனான்ஸ் அதிபர் சரவணன் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.