தடுப்புச் சுவரில் பைக் மோதி இருகூர் வாலிபர் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள இருகூர், நாராயணசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அந்தோணி சந்தோஷ் (வயது 24) இவர் நேற்று முன்தினம் இரவில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரின் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இறந்து போன அந்தோணி சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..