திருச்சியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா.!!

இந்தியாவின் நேரு மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலா ராணி இளைஞர் காங்கிரஸ் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் எஸ் சி மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்டத் தலைவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானனோர் கலந்து கொண்டு ஜவஹர்லால் நேருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..