மின்சாரம் தாக்கி நகை மதிப்பீட்டாளர் பரிதாப பலி..

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நடேச முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 52) இவர் நஞ்சுண்டாபுரம் கூட்டுறவு சொசைட்டி வங்கியில் நகை மதிப்பீட்டளராக வேலை பார்த்து வந்தார். மற்ற நேரங்களில் டிவி – ரேடியோ பழுது பார்க்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..