இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு – 2 கொள்ளையர்கள் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி(42) இவர் கடந்த 24. – ம் தேதி  வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்ட புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் அஷ்ரபுதீன்(21) மற்றும் முகமது ரபீக் மகன் முகமது ரபி (22) ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 10½ சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.