வீட்டில் ஜன்னல் அருகே வைத்திருந்த நகை,பணம் அபேஸ் !!

சென்னை,கிழக்கு தாம்பரம்பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி ( வயது 63 )இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் . பார்க் டவுன் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார் .அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை .அதில் .4 பவுன் நகை , பணம் ரூ 14 ஆயிரம் இருந்தது. ஜன்னல் வழியாக கையை விட்டு பர்சை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஹெலன் பத்மா ராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..