வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது .

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள கருமலை, டாப் டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி ( வயது 30)இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரி செல்வம்( வயது 23)நந்தினி தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த ரூ 7 ஆயிரத்து காணவில்லை. இதுகுறித்து வால்பாறை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரிச்செல்வம் (வயது 23 )என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து ரூ 5 ஆயிரம் மீட்க்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.