பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பியவர் கைது.

கோவை குனியமுத்தூரில் உள்ள நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்தவர் ரங்கன் இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47)இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார்.இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருபவர் சரவண குமார் (வயது 36) இவர் கடந்த 10 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் இவர் தனலட்சுமிக்கு செல்போனில் ஆபாச படங்களுடன் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார் .இவர் கோவில் மேடு கண்ணபிரான் நகரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை மிரட்டல், ஐ.டி. சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.