பத்​திரி​கை​யாளர்​களுக்கு சலுகை விலை​யில் வீட்டு மனை ​பட்டா:மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை- சட்டப்பேர​வை​யில் அமைச்சர் மு.பெ.​சாமிநாதன் அறிவிப்பு.!

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மரகதம் குமாரவேல் பேசும்போது, ”பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து எங்கள் துறையின் செயலர், இயக்குநர் ஆகியோர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல சூழல் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.