போலி பத்திரங்கள், போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு மனையை அபகரித்த கேடி பெண் கைது..!

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய ற் குற்ற பிரிவு நி ல பிரச்சனை தீர்வு பிரிவில் தெய்வ ஜோதி கொடுத்த பு கா ரில 1990 ஆம் வருடம் அம்பத்தூர் தாலுகா புத்தகரம் பகுதியில் 2580 சதுர அடி கொண்ட வீட்டு மனை யை பாக்கியம் மற்றும் பொது அதிகாரம் பெற்ற முகவர்கள் முருகேசன் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் யி டமிருந்து கிரைய ம் பெற்று அனுபவத்தில் வைத்துள்ளார் . தெய்வ ஜோதி மேலே குறிப்பிட்ட என்னுடைய இடத்தை பராமரித்து வந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லங்கம் போட்டு பார்த்த போது தெய்வ ஜோதி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலியான கையெழுத்து போட்டு ஏழுமலை பெயரில் பட்டா மாற்றம் செய்தும் மனுதாரரின் சொத்தை அபகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தங்களுக்கு சொந்தம் இல்லாத இடத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை உருவாக்கி சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்தி ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள இடத்தை கொள்ளையடித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க நி ல பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். கே சங்கர் ஆவடி மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்களது கடுமையான உத்தரவின் பேரில் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் கந்தசாமியின் மனைவி கேடி கீதா வயது 55 அண்ணா தெரு சின்னசேக்காடு மணலி சென்னை என்பவளை கைது செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..