கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை – 2 பேர் கைது.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை – கிழவன் புதூர் ரோட்டில் ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேட்டைக்காரன் புதூர் சிவசங்கர் (வயது 28 ) மணிகண்டன் ( வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 400 லாட்டரி டிக்கெட்டுகளும், லாட்டரி விற்ற பணம் ரூ.8 ஆயிரம், ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..