கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை – 2 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் நேற்று சிங்காநல்லூர் ஆனையங்காடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை மறைத்து வைத்து 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் ,ரங்கா நகரை சேர்ந்த கமாலுதீன் (வயது 48) உப்பிலிபாளையம் சி.எம்.சி .காலனியை சேர்ந்த சுனில் குமார் ( வயது 19 )என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.