கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை – 4 பேர் கைது..!

கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகதுடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்டலாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ். எம். பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39) வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (வயது 39) எஸ் .எம் . பாளையம் பிரதீப் (வயது 34) நல்லாம்பாளையம் ஆதிஷ் கண்ணன் (வயது28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரபு என்பவர் தப்பி ஓடிவிட்டார்.இவர்களிடமிருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட் ,ஒரு கார், 9 செல்போன் ரூ 1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப்பறிமுதல் செய்யப்பட்டது.