17 வயது சிறுமியை காஷ்மீருக்கு கடத்தி பாலியல் தொல்லை – போக்சோவில் காதலன் கைது..!

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .கடந்த 13ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் சிறுமியை அவர் முன்பு வேலை பார்த்த துணி கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் ( வயது 23) என்பவர் காதலித்து வந்ததும் அவர்கள் 2 பேரும் மாயமானதும் தெரிய வந்தது .இது குறித்து கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி ( பொறுப்பு) தலைமையில் பேரூர் இன்ஸ்பெக்டர் முருகன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், போலீசார் கண்ணதாசன் ,சாந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை 10 நாட்கள் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே சிறுமியை முகமது அயாஸ் காஷ்மீருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. உடனே பேரூர் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படைபோலீசார்காஷ்மீர் சென்று சிறுமியை மீட்டனர். பின்ன சிறுமி மற்றும் முகமது அயாஸ் ஆகியோரை விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அந்த வழக்கு பேரூர் அனைத்துமகளிர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நடத்தியவிசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி முகமது அயாஸ் பழகியதும் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது .இது குறித்து பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அயாசை கைது செய்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.