14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் – போக்சோவில் இளைஞர் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் சஞ்சீவ் (வயது 18) மெக்கானிக். இவருக்கும் காரமடையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது .இது நாளடைவில் காதலாக மாறியது . இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி சஞ்சீவ் கடத்திச் சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காரமடை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது காதல் ஜோடி தோலம்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .அதில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி சஞ்சீவ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்..