விஷம் கலந்த உணவு கொடுத்து நாய் கொலையா..? போலீசில் புகார்.!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம் பாளையம், சின்னத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரவர ஈஸ்வரன் (வயது 48) பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பார் .இந்த தெரு நாய்களில் ஒரு நாய் நேற்று திடீரென்று இறந்து கிடந்தது. இது குறித்து தர்மேந்திரர சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் கோழி கழிவில் விஷம் கலந்து கொடுத்து நாயை கொலை செய்திருப்பதாக கூறியுள்ளார் .இது குறித்து போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..